சனி, 8 நவம்பர், 2008

அம்பாள் சொன்ன வழி

குருதேவருக்கு தொண்டையில் வலி ஏற்பட்டு சிரமப்பட்டார். உணவு சிறிதும் உண்ண முடியவில்லை. மருத்துவம் செய்து கொள்ள சீடர்கள் வற்புறுத்தினர். மறுத்தார் பகவான்.
“எல்லாம் அன்னை காப்பாற்றுவாள் என்கீறீர்களே எங்களுக்காக அவளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்” என்றான் அன்போடு விவேகாநந்தர். “சரி உனக்காக அவளிடம் கேட்கிறேன்” என்று உள்ளே சென்று சிறிதுநேரம் கழித்து திரும்பினார் பகவான்.
“அம்பாளிடம் சொன்னீர்களா?”, கேட்டார் விவேகாநந்தர் ஆவலோடு.
“சொன்னேன், தொண்டையில் வலிக்கிறது. உணவு உண்ண இயலவில்லை. உண்பதற்கு ஏதாவது வழி செய் என்றேன் அடற்கு அம்பாள், “நீதான் உன் சீடர்களின் வாய் மூலமாகச் சாப்பிட்டுக் கொண்டுதானே இருக்கிறாய், பிறகென்ன” என்று கேட்டாள். எனக்கு வெட்கமாய்ப் போய்விட்டது, வந்துவிட்டேன்” என்றார் குருதேவர்.

கருத்துகள் இல்லை: