சனி, 8 நவம்பர், 2008

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

ஒவ்வொரு நாளும் புலர்க்காலைப் பொழுதின் விடியலும் புதிதே. ஒவ்வொரு நாளும் முகையவிழ்ந்து மலர்கள் மலர்வதும் புதிதே. ஒவ்வொரு நாளும் பூமித்தாயின் திருமடியில் பல்லாயிரம் உயிர்கள் பிறப்பதும் புதிதே. நித்தம் நித்தம் புதுமலராய் நம்மைச் சுற்றியுள்ள இயற்கை அனைத்தும் மலரும்போது மனிதன் மட்டும் மலராமல் இருப்பது முறையாமோ?. ஒவ்வொரு நாளும் முடிந்தால் ஒவ்வொரு நொடியும் மனித வாழ்வில் ஏதேனுமொன்று பதிதாய் முகிழ்க்க வேண்டும் ஆக பாரதி கூற்றுக்கொப்ப இன்று புதிதாய்ப் பிறந்தோம் இன்றே இப்பொழுதே முழக்கம் செய்வோம்.

கருத்துகள் இல்லை: