என்ன வளமில்லை தமிழ் மொழியில்
தமிழைப் படிக்கின்றபோது ஏற்படுகின்ற இன்பமிருக்கிறதே அதை வார்த்தைகளால் சொல்லிட முடியாது. அதிலும் அதன் இலக்கணச் சிறப்பிலும் இலக்கிய வளத்திலும் காலூன்றி கற்க விழைந்திட்டால் நம்மை பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும்.
தமிழின்பக் கடலில் முத்தெடுக்கத் தொடங்கிவிட்டால் அதுவே நம்மை பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும். அதனால்தான் என்னவோ சங்கக்கால பெயர் குறிப்பிடாத புலவனொருவன் ‘ இருந்தமிழே உன்னால் இருந்தேன் – இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’ என்றார் போலும்.
விந்தைமொழிச் செந்தமிழ்ப்போல் உலகில் வேறுமொழி இல்லையென எல்லீசர், ஜி.யு.போப்பையர், வீரமாமுனிவர் போன்ற மேனாட்டு அறிஞர் பகன்றதை எண்ணிப்பாருங்கள். ஆங்கிலத்தில் சிந்தைக்கவர் பெண்களுக்கெனப் பருவமெனும் சொல்லொன்றே ‘உமன்’ என்பதாகும்.
நந்தமிழில்தான் ‘பேதை’,’பெதும்பை’,’மங்கை’,’மடந்தை’,’அரிவை’,’பேரிளம் பெண்’ என்று சொற்கள் பல்கிப் பெருகியுள்ளன. பூக்களின் பருவத்தை தமிழரைவிட அழகுறச் சொன்னவர் யார்? ‘அரும்பு’,’மொட்டு’,’முகை’,’மலர்’,’அலர்’,’வீ’,செம்மல்’ அமுதாக ஏழுநிலை அடுக்கி வைத்தானே.
தருக்களிலே இலையுண்டே அதற்கும் தமிழில் பருவங்கள் உள்ளன. ‘கொழுந்து’ இளமைப் பருவத்தை ‘தளிர்’ என்போம். இலை,’பழுப்பு’,’சருகு’ என்ற சொற்களெல்லாம் தமிழிலுண்டு. ஆல், அரசு,,அத்தி, பலா, மா, வாழைக்கோ அழகு ‘இலைகள்’ என்போம்.
அகத்தி போலிருக்கும் செடி பிறப்பைக் ‘கீரை’ என்போம். பூமியிலே படரும் வகை தாவரத்தை ‘பூண்டு’ என்றும் அருகு, கோரை போன்ற சப்பாத்திச் செடியைத் ‘தாழை’ என்றும் கரும்பு நாணலை ‘தோகை’ என்றும் உடலோங்கி நிற்கின்ற பனைதென்னைக்கோ ‘ஓலை’ என்று பெயரிட்டோம்.
மேற்கண்ட சொற்சிறப்பெல்லாம் பிறமொழிக்குள் வலைபோட்டுத் தேடினாலும் கிடைப்பதில்லை. கடலைப்போல் பரந்திருக்கும் தமிழில்தான் களஞ்சியம்போல் கணக்கிலா சொற்களுண்டு.
நீல வண்ணக் கடல்நீரை இரைத்துக் கொண்டிருந்தபோதும் கடுகளவும் குறையாமல் இருப்பதைப்போல் கடன் கொடுத்தும் பிறமொழிகள் கவர்ந்து சென்றும் கட்டுடலம் குலையாமல் கன்னிமாறா உடலழகைப் பெற்றதெங்கள் தமிழே என்ற உண்மையினை மறுத்திடுவோன் மடையனாவான்.
ஆங்கிலத்தை உலகமொழி என்கிறோமே அதுகூட கடனாளி நம் தமிழுக்கு, மாங்காயை நாம் தந்தோம், ’மெங்கோ’ என்றான். ‘சாண்டல் ஊட்’ என்கிறான் நாம் கொடுத்த சந்தனத்தின் மணம் நுகர்ந்து.
அரிசியை ‘ரைஸ்’, இஞ்சியை ‘ஜிஞ்சர்’, அணைக்கட்டை ‘அணைகட்’ என்று ஆங்கிலமாக்கியவன் வெள்ளையன். தனித்தினிக்கும் தாய்ப்பாலில் சர்க்கரையும் நீரும் தேவையில்லை என்பதுபோல தனித்தியங்கும் வல்லமை தமிழுக்குண்டு.
தமிழ் தன்காலில் தான்நிற்கும் பிறரைத் தாங்கும். அணித்தமிழில் பிறமொழியைக் கலந்துவிட்டால் அழகாக வளருமென்போர் அறிவிலிகள். தனித்திருகும் அரிசியிலே கல்கலந்தால் தின்பவரின் பல்லுடையுமே தவிர சுவைத்திடாது.
ஓரெழுத்து ஈரெழுத்து மூவெழுத்து நான்கெழுத்தென எத்தனையோ சொற்கள் அடக்கமாகி பொருள் கொண்டிருக்கும். மூன்று இலக்கத்திற்குமேல் சொற்களிருக்க தமிழ் பிறமொழிகளிடம் கடன் வாங்கத் தேவையில்லை.
நீர் மிதக்கும் கப்பலுக்கு நங்கூரம்போல் மரங்களுக்கு வேரிருந்து காப்பதுபோல் மக்கள் வாழ்வில் வேர்ப்பிடிப்பாய் இருப்பததன் மொழியே. இட்லர் போர்வெறியன் தானெனினும் அவனுங்கூட ஒன்றைச் சொன்னானே ‘ஓரினத்தைச் சீரழிக்க வேண்டுமென்றால் மொழியைச் சிதைத்துவிடு; இனம் தானாக அழிந்தேபோகுமென்றானே’.
விரல்களெல்லாம் பறித்தாலும் உடலிருக்கும்; விலா எலும்பை முறித்தாலும் உயிரிருக்கும் ஆனால் குரல்வளையை நெறித்தபின்னே உயிரா மிஞ்சும் அதுபோல குலமொழியை அழித்துவிட்டால் இனமேயில்லை
இருள்கவிந்தால் ஒளிகிளம்பி விரட்டுதல்போல் இன்னுயிராம் தமிழ்க்கின்னல் சூழுமென்றால் திரள்திரளாய் ஒளிப்பிழம்புத் தீரர் கூட்டம் திரண்டெழுந்தால் பகையிருட்டுத் தூள் பறக்கும்.
மொழியென்றால் மனிதனுக்கு உயிரின்மூச்சு; மூச்சுதனை இயக்குகின்ற உயிர்ப்புக்காற்று. மொழிதான் குமுகாயத்தை முறியாமல் காக்கும் அச்சாணி. பேசும் மொழியொன்றே இலக்கியங்கள் பிறப்பதற்கு மூலமாகும்; வம்சப் பூ மலர்வதற்கே அதுவே இரத்தநாளம்.
மொழிப்பற்றும் இனப்பற்றும் இருப்பவனே முழுமனிதன். செழிப்புற்று வளர்ந்துயர்ந்து ஓங்கிநிற்கும் ஜாப்பனியர் பிரான்சு நாட்டார் கொண்டிருக்கும் மொழியுணர்ச்சி நாம் பெற்றாலே விடிவுண்டு. நாகரிக வளர்ச்சிக்கும் நம் இனத்தின் நல்ல மறுமலர்ச்சிக்கும் புதுவெள்ளம்போல் வேகமாக அறிவெழுச்சிப் பெறுவதற்கும் மொழியே வேண்டும்.
தமிழின் வளமறிந்து இருபத்தோராம் நூற்றாண்டின் தேவையறிந்து அறிவியல் தொழில்நுட்ப சொற்களைப் பெருக்கி கணினி போன்ற நவின கருவிகளிலும் தமிழை உலாவரச் செய்வது தமிழனின் கடமையாகும்.
தமிழைக் குறைகூறி வாளாவிருப்பதைவிட்டு இனியாகிலும் தமிழன் தமிழின் நிலையுயர்த்த நினைப்பானா?
வானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.
ஞாயிறு, 17 மே, 2009
சனி, 16 மே, 2009
காதல் செய்வீர் உலகத்தீரே
“காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
காணமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!”
பாரதியின் காதல் பரிந்துரை, மனிதக் காதலையும் தாண்டி தெய்விகம் சிந்தும் திருவார்த்தை .
‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்று உள்ளமுருகிய உத்தமக் காதலன் பாரதி
‘காதல் போயிற் காதல் போயிற் சாதல் சாதல் சாதல்...’ என்று சூளுரைத்தவனும் அவனே. மதம், இனம், மொழி, தேசம் என்ற எல்லா எல்லைகளயும் கடந்தவன் பாரதி.
காதலெனும் மோகனச் சொல்லில் விவரிக்க முடியாத தேவமயக்கம் என்றும் காந்தமாய் மனித இனத்தை கவர்ந்திழுக்கிறது.
காதல் ஒன்றுதான் இந்தப் பூமியை இன்றும் ஈரப்பசையோடு வைத்துள்ளது. காதல் இல்லையென்றால் பூமி வெறும் சுடுகாடு.
எல்லையில்லாத அன்பு மனிதனிடத்தோ இயற்கையிடத்தோ இறையிடத்தோ இல்லை அங்கெங்கெனாதபடி எவ்விடத்தும் நீக்கமற நிறைந்துள்ள பேராற்றல்தான் காதல்.
காணமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!”
பாரதியின் காதல் பரிந்துரை, மனிதக் காதலையும் தாண்டி தெய்விகம் சிந்தும் திருவார்த்தை .
‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்று உள்ளமுருகிய உத்தமக் காதலன் பாரதி
‘காதல் போயிற் காதல் போயிற் சாதல் சாதல் சாதல்...’ என்று சூளுரைத்தவனும் அவனே. மதம், இனம், மொழி, தேசம் என்ற எல்லா எல்லைகளயும் கடந்தவன் பாரதி.
காதலெனும் மோகனச் சொல்லில் விவரிக்க முடியாத தேவமயக்கம் என்றும் காந்தமாய் மனித இனத்தை கவர்ந்திழுக்கிறது.
காதல் ஒன்றுதான் இந்தப் பூமியை இன்றும் ஈரப்பசையோடு வைத்துள்ளது. காதல் இல்லையென்றால் பூமி வெறும் சுடுகாடு.
எல்லையில்லாத அன்பு மனிதனிடத்தோ இயற்கையிடத்தோ இறையிடத்தோ இல்லை அங்கெங்கெனாதபடி எவ்விடத்தும் நீக்கமற நிறைந்துள்ள பேராற்றல்தான் காதல்.
சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன்
இலைகளை உதிர்த்துவிட்டு வெள்ளாடை கட்டாத விதவையாய் மரங்களெல்லாம் வாடி நிற்கிறபோது இதோ அவை துளிர்த்து சிரிக்கிற வசந்த காலத்தை நினைத்தால் மகிழ்ச்சியளிக்கிறது.
ஆற்றுப் படுகையின் வெடிப்புகளைப் பார்க்கிறபோதெல்லாம் நாளை அங்கு ஈரவாடையோடு பசுமை நம்பிக்கைக் கோலங்கள் வரைவதை நினைத்தால் உற்சாகம் உள்ளூர ஊற்றெடுக்கிறது.
கோடை காலத்தில் வெப்பம் தகித்து வியர்வை ஆறு ஓடுகிறபோது தை மாத சுகந்தமான குளிர்க்காற்று மனத்திற்கு சுகாமாயிருக்கிறது.
வெப்பமும், வெதுவெதுப்பும், குளிரும், கூதலும் ஒரு வருடத்தின் பருவங்கள் அதுபோலத்தான் மனிதவாழ்விலும் சுகமும் துக்கமும் வந்து போகும்.
இன்றைய இரவு நாளை விடிந்து விடும்; துன்பங்கள் துயரங்கள் மடிந்து விடும். நடக்கிறவரை நட பாலைவனப் பயணத்திலும் ஒருநாள் பசுஞ்சோலை தென்படும் என்ற நம்பிக்கையோடு நட.
முள்செடியின் கீறல்களை சகித்துக்கொள்ளாவிட்டால் தேன் எப்படி எடுக்க இயலும்?. கல்லிலும் கால் நடக்காது; முள்ளிலும் வதைபடாது ஒரு காலும் முன்னேற்றத்தை முத்தமிட முடியாது தோழா.
உயர்வின் உச்சியிலே ஒளி வீசிக்கொண்டிருக்கும் உயர்ந்த மனிதர்களின் உயரத்தை மட்டுமே நம்மில் பலர் எண்ணி வியக்கின்றோமேயொழிய அந்த நிலைக்குயர அவர்கள் பட்ட துன்பங்களையும் எடுத்தத் தொடர் முயற்சிகளையும் எண்ணிப்பார்ப்பதில்லை.
தந்தையின் திருவாக்கைக் காப்பதற்கு பதினான்கு ஆண்டுகள் கானகம் செல்ல துணியாவிட்டால் இன்று இராமன் நாமமில்லை
தோளிலே சிலுவை சுமந்து கல்வாரிக்கு நடக்காவிட்டால் இயேசு பிரானுமில்லை; கபிலவஸ்துவைவிட்டு வெளியேறாவிட்டால் போதிமர புத்தனுமில்லை.
கல்லடி, சொல்லிடி, கொலை மிரட்டல் போன்ற எதிர்ப்புகளை பொறுமையோடும் நம்பிக்கையோடும் சமாளித்தப் பின்னரே நபிகள் இஸ்லாத்தை உலகுக்குப் பரப்பினார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியையே தழுவிய ஆப்ரகாம் லிங்கன் பின்னாளில் அதிபராக எழவில்லையா?
எத்துணை தோல்விகளையும் வெற்றியாக உருமாற்றிய எடிசனை உலகம் கொண்டாடவில்லையா? உடல் பழுதுபட்டாலும் உயர் எழுத்துக்களால் எலன் கெல்லர் பிரகாசிக்கவில்லையா?
இன்றும் நம்மோடு வாழும் சிலர் புயலையும் கடந்து வெள்ளி நிலவாய் பிரகாசிக்க நாம் மட்டும் இயலாமைகளையே வாழும் இலக்கணமாய் வைத்துக்கொண்டு வாழ்வது தகுமா?
நமது சொந்தச் சிறைகளிலிருந்து முதலில் வெளியேற வேண்டும். காட்டு யானையைப் பழக்குவதற்காக முதலில் அதன் காலை சங்கிலியால் பிணித்துத் தூணில் கட்டுவார்கள்.
காலப்போக்கில் எதிலும் கட்டப்படாத சிறிய சங்கிலி மட்டுமே அதன் காலில் தொங்க அந்த யானை நினைவால் வாழ்நாள் முழுவதும் சிறைப்பட்டிருக்கும்.
நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகிறோம் என்பது மாபெரும் உண்மை. நம்பிக்கையோடு நாள்களை நடத்திக் கொண்டிருப்பவர் வெள்ளி நட்சத்திரமாகிறார். நம்பிக்கை நலிந்து போனவர் தம்முள் நரகத்தை உருவாக்கி தம்மையே பலியிட்டுக் கொள்கிறார்.
எல்லா இரவுகளும் விடிந்திருக்கின்றன; நாளை விடியல் இல்லையென்று யார் கூறினாலும் நாம் ஏற்கப் போவதில்லை.
மனிதர்கள் வெறும் காற்றைச் சுவாசிப்பதால் வாழவில்லை; நம்பிக்கையைச் சுவாசிப்பதால்தான் வாழ்கிறார்கள். பிழைக்கவே மாட்டேன் என நினைக்கும் நோயாளிக்கு எத்தகைய மருந்து கொடுத்தும் பயனென்ன?
தூந்திர வெளிகளில் துயரத்தையே சுவாசித்துக் கொண்டிருக்கின்ற எஸ்கிமோக்களை வாழவைப்பதே என்றேனும் ஒரு பொழுது சூரியக் கதிர் எட்டிப் பார்க்குமென்ற நம்பிக்கைதான்.
எப்போதும் வெளிச்சத்தை நோக்கி நடக்க வேண்டும். நிதமும் எதிர்காலம் ஒளிமயமானது என்கிற நம்பிக்கையைச் சுமந்து நடைபயில வேண்டும். அப்போதுதான் இந்த வாழ்க்கையின் மீது சலிப்போ வெறுப்போ இருக்காது.
பாதைகள் பசுமையானவை; பயணங்கள் இனிமையானவை என்று நிதமும் எண்ண வேண்டும். துன்பங்கள் எதிர்பட்டாலும் அதைக் கண்டு துவண்டுவிடாமல் மேலே மேலே முன்னேற வேண்டும்.
துன்பம் தொடாத மனிதன் யாரேனும் உண்டா? துன்பத்தைத் தாங்கிக்கொண்டு நம்பிக்கையோடு பயணம் செய்தால் இன்பம் தானாக நம்மை வாழ்த்தும்.
சுடச்சுடத்தான் தங்கம் ஒளிரும்; பட்டை தீட்டத் தீட்டத்தான் வைரம் ஒளி வீசும். அதுபோல நம்மை வருத்தும் துயரம் யாவும் நம்மை பக்குவப்படுத்தி சிறந்த மனிதனாக உருவாக்குகின்றது. வாழ்க்கையை வளப்படுத்தும் நோக்கிலே எதிர்படும் சவால்களை நம்பிக்கையோடு போராடி வெல்ல வேண்டும்.
‘சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன்’ என்ற கவிஞர் வைரமுத்து கூற்றுக்கிணங்க முன்னேற்றத்தைத் தரிசிக்க முட்டுக்கட்டைகளை எல்லாம் தகர்த்தெறிந்து போராடுகிறவனே மனிதன்.
நமது முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு. பசுமையான நிலத்தில் தூவப்பட்ட விதைகள் முளைக்காமல் போனதில்லை. நம்பிக்கை நம்மை மனிதர்களாக்கின்ற மகாமந்திரம்.
நம்பிக்கைதான் வாழ்க்கை. அதை எப்போதும் நெஞ்சிலே வைத்து வளர்த்தாக வேண்டும்.
‘காலம் இருண்டிருந்தாலும் இதயத்தையே தீபமாகப் பிடித்துக்கொண்டு தீர்க்க தரிசனத்தோடு முன்னேறுவோம், உழைப்புச் செங்கோலை உயர்த்திப் பிடிப்போம், நம் காலடிச் சுவடுகளால் எதிர்காலங்கள் பிரகாசிகட்டும்’ என்ற சூரிய காந்தன் வரிகளை துவழும் போதெல்லாம் நினைவு கொள்வோம்.
ஆற்றுப் படுகையின் வெடிப்புகளைப் பார்க்கிறபோதெல்லாம் நாளை அங்கு ஈரவாடையோடு பசுமை நம்பிக்கைக் கோலங்கள் வரைவதை நினைத்தால் உற்சாகம் உள்ளூர ஊற்றெடுக்கிறது.
கோடை காலத்தில் வெப்பம் தகித்து வியர்வை ஆறு ஓடுகிறபோது தை மாத சுகந்தமான குளிர்க்காற்று மனத்திற்கு சுகாமாயிருக்கிறது.
வெப்பமும், வெதுவெதுப்பும், குளிரும், கூதலும் ஒரு வருடத்தின் பருவங்கள் அதுபோலத்தான் மனிதவாழ்விலும் சுகமும் துக்கமும் வந்து போகும்.
இன்றைய இரவு நாளை விடிந்து விடும்; துன்பங்கள் துயரங்கள் மடிந்து விடும். நடக்கிறவரை நட பாலைவனப் பயணத்திலும் ஒருநாள் பசுஞ்சோலை தென்படும் என்ற நம்பிக்கையோடு நட.
முள்செடியின் கீறல்களை சகித்துக்கொள்ளாவிட்டால் தேன் எப்படி எடுக்க இயலும்?. கல்லிலும் கால் நடக்காது; முள்ளிலும் வதைபடாது ஒரு காலும் முன்னேற்றத்தை முத்தமிட முடியாது தோழா.
உயர்வின் உச்சியிலே ஒளி வீசிக்கொண்டிருக்கும் உயர்ந்த மனிதர்களின் உயரத்தை மட்டுமே நம்மில் பலர் எண்ணி வியக்கின்றோமேயொழிய அந்த நிலைக்குயர அவர்கள் பட்ட துன்பங்களையும் எடுத்தத் தொடர் முயற்சிகளையும் எண்ணிப்பார்ப்பதில்லை.
தந்தையின் திருவாக்கைக் காப்பதற்கு பதினான்கு ஆண்டுகள் கானகம் செல்ல துணியாவிட்டால் இன்று இராமன் நாமமில்லை
தோளிலே சிலுவை சுமந்து கல்வாரிக்கு நடக்காவிட்டால் இயேசு பிரானுமில்லை; கபிலவஸ்துவைவிட்டு வெளியேறாவிட்டால் போதிமர புத்தனுமில்லை.
கல்லடி, சொல்லிடி, கொலை மிரட்டல் போன்ற எதிர்ப்புகளை பொறுமையோடும் நம்பிக்கையோடும் சமாளித்தப் பின்னரே நபிகள் இஸ்லாத்தை உலகுக்குப் பரப்பினார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியையே தழுவிய ஆப்ரகாம் லிங்கன் பின்னாளில் அதிபராக எழவில்லையா?
எத்துணை தோல்விகளையும் வெற்றியாக உருமாற்றிய எடிசனை உலகம் கொண்டாடவில்லையா? உடல் பழுதுபட்டாலும் உயர் எழுத்துக்களால் எலன் கெல்லர் பிரகாசிக்கவில்லையா?
இன்றும் நம்மோடு வாழும் சிலர் புயலையும் கடந்து வெள்ளி நிலவாய் பிரகாசிக்க நாம் மட்டும் இயலாமைகளையே வாழும் இலக்கணமாய் வைத்துக்கொண்டு வாழ்வது தகுமா?
நமது சொந்தச் சிறைகளிலிருந்து முதலில் வெளியேற வேண்டும். காட்டு யானையைப் பழக்குவதற்காக முதலில் அதன் காலை சங்கிலியால் பிணித்துத் தூணில் கட்டுவார்கள்.
காலப்போக்கில் எதிலும் கட்டப்படாத சிறிய சங்கிலி மட்டுமே அதன் காலில் தொங்க அந்த யானை நினைவால் வாழ்நாள் முழுவதும் சிறைப்பட்டிருக்கும்.
நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகிறோம் என்பது மாபெரும் உண்மை. நம்பிக்கையோடு நாள்களை நடத்திக் கொண்டிருப்பவர் வெள்ளி நட்சத்திரமாகிறார். நம்பிக்கை நலிந்து போனவர் தம்முள் நரகத்தை உருவாக்கி தம்மையே பலியிட்டுக் கொள்கிறார்.
எல்லா இரவுகளும் விடிந்திருக்கின்றன; நாளை விடியல் இல்லையென்று யார் கூறினாலும் நாம் ஏற்கப் போவதில்லை.
மனிதர்கள் வெறும் காற்றைச் சுவாசிப்பதால் வாழவில்லை; நம்பிக்கையைச் சுவாசிப்பதால்தான் வாழ்கிறார்கள். பிழைக்கவே மாட்டேன் என நினைக்கும் நோயாளிக்கு எத்தகைய மருந்து கொடுத்தும் பயனென்ன?
தூந்திர வெளிகளில் துயரத்தையே சுவாசித்துக் கொண்டிருக்கின்ற எஸ்கிமோக்களை வாழவைப்பதே என்றேனும் ஒரு பொழுது சூரியக் கதிர் எட்டிப் பார்க்குமென்ற நம்பிக்கைதான்.
எப்போதும் வெளிச்சத்தை நோக்கி நடக்க வேண்டும். நிதமும் எதிர்காலம் ஒளிமயமானது என்கிற நம்பிக்கையைச் சுமந்து நடைபயில வேண்டும். அப்போதுதான் இந்த வாழ்க்கையின் மீது சலிப்போ வெறுப்போ இருக்காது.
பாதைகள் பசுமையானவை; பயணங்கள் இனிமையானவை என்று நிதமும் எண்ண வேண்டும். துன்பங்கள் எதிர்பட்டாலும் அதைக் கண்டு துவண்டுவிடாமல் மேலே மேலே முன்னேற வேண்டும்.
துன்பம் தொடாத மனிதன் யாரேனும் உண்டா? துன்பத்தைத் தாங்கிக்கொண்டு நம்பிக்கையோடு பயணம் செய்தால் இன்பம் தானாக நம்மை வாழ்த்தும்.
சுடச்சுடத்தான் தங்கம் ஒளிரும்; பட்டை தீட்டத் தீட்டத்தான் வைரம் ஒளி வீசும். அதுபோல நம்மை வருத்தும் துயரம் யாவும் நம்மை பக்குவப்படுத்தி சிறந்த மனிதனாக உருவாக்குகின்றது. வாழ்க்கையை வளப்படுத்தும் நோக்கிலே எதிர்படும் சவால்களை நம்பிக்கையோடு போராடி வெல்ல வேண்டும்.
‘சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன்’ என்ற கவிஞர் வைரமுத்து கூற்றுக்கிணங்க முன்னேற்றத்தைத் தரிசிக்க முட்டுக்கட்டைகளை எல்லாம் தகர்த்தெறிந்து போராடுகிறவனே மனிதன்.
நமது முயற்சிக்கு நிச்சயம் பலன் உண்டு. பசுமையான நிலத்தில் தூவப்பட்ட விதைகள் முளைக்காமல் போனதில்லை. நம்பிக்கை நம்மை மனிதர்களாக்கின்ற மகாமந்திரம்.
நம்பிக்கைதான் வாழ்க்கை. அதை எப்போதும் நெஞ்சிலே வைத்து வளர்த்தாக வேண்டும்.
‘காலம் இருண்டிருந்தாலும் இதயத்தையே தீபமாகப் பிடித்துக்கொண்டு தீர்க்க தரிசனத்தோடு முன்னேறுவோம், உழைப்புச் செங்கோலை உயர்த்திப் பிடிப்போம், நம் காலடிச் சுவடுகளால் எதிர்காலங்கள் பிரகாசிகட்டும்’ என்ற சூரிய காந்தன் வரிகளை துவழும் போதெல்லாம் நினைவு கொள்வோம்.
மாணவர்களே! இதயத்தில் புதுவிளக்கேற்றுங்கள்
மாண்புமிக்க மாணாக்கரே,
நாளையொரு புதிய விடியலுக்கு வித்திடப்போகிற நம்பிக்கை நட்சத்திரங்களே, உங்கள் இதயத்தோடு ஒரு சில வார்த்தைகள். ஒரு தாயின் அன்போடும் தந்தையின் எதிர்பார்ப்போடும் உங்கள் பள்ளி வாழ்க்கை ஏடுகளைப் புரட்டுகின்றேன்.
பள்ளிப் பாடங்களே பெருஞ்சுமையாகிவிட்ட இன்றைய சூழலில் பெற்றோரின் கனவுகளையும் சுமந்து கொண்டு நடைபோடும் உங்களைப் பார்க்கும்போது எனக்கும் வருத்தம் மேலிடுகிறது.
இந்த மனச்சுமையைச் சுகமாக மாற்றும் வல்லமையை நீங்கள் வளர்த்துக் கொள்வது தவிர மீள்வதற்கு வேறுவழியில்லை.
அன்பு பெற்றோர் எப்படியெல்லாம் அரும்பாடுபட்டு உங்களைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்று கொஞ்சம் ஆழ்மனத்தில் நிறுத்தி நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?.
உங்களின் ஒளிமயமான எதிர்காலமே முக்கியமென தங்கள் உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது அல்லும் பகலும் உழைக்கிறார்களே அந்தத் தியாக உள்ளங்களின் நம்பிக்கைகளை சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?
வெயில் மழை பாராமல் அத்தனை துன்பங்களையும் தனதாக ஏற்றுக்கொண்டு உங்களின் நலனே தன் சுகமென்று நம்பிக்கையில் கழிக்கும் அவர்களின் உள்மன ஆவலையாவது அறிந்துள்ளீர்களா?
படிக்கின்ற வயதினிலே கற்பனை தேரோடத்தில் சினிமா நாயகன் நாயகிப்போல் உங்களையே நீங்கள் வரித்துக்கொண்டு காதல் வலையில் வீழ்ந்து காமலீலையில் அழுகிப் போவதைப் பார்க்கும்போது இதயம் வலிக்கிறது.
தொன்றுத்தொட்டு நம் முன்னோர் சேர்த்து வைத்த பண்பாட்டுச் செழுமைகளைச் சிந்தையிலே நிறுத்தாமல் பள்ளிச் சந்தையிலே சீரழிக்கும் உங்களைப் போன்ற மாணவர்களின் எண்ணிக்கை சிறிதில்லை.
காடுமேடு கழனி திருத்தி நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி பெற்றக் குழந்தைகள் புவியோங்கப் பாடுபடும் பெற்ற மனங்களின் மனக்கோட்டைகளைச் சிதறடிக்கும் மாணவர் கூட்டத்திற்கு இப்போதும் குறைவில்லை.
கல்வியென்றாலே கசக்கும் கற்றவர் சொல் என்றாலே முகத்தைத் திருப்பும் முன்னோர் நெறிமறந்து உருமாறி இலக்கின்றி காற்றடித்தால் அலைக்கழிக்கும் இலவம் பஞ்சாய்ப்போன உங்களைப் போன்ற மாணவர் இந்நாளில் ஆன நெடுங்கதைகள் பலவுண்டு.
புனித புத்தகங்களைச் சுமக்கும் பையிலே சினிமா செறிவட்டுகளை சுமந்து சென்று சகாக்களோடு சினிமா ஆய்வரங்கம் செய்யும் மாணக்கரை நிறையவே சந்திக்கின்றேன்.
கணிதம் அறிவியல் என்றாலே புறமுதுகு காட்டி ஓடியதன் விளைவாக இன்று அறிவியல் பிரிவில் பயிலும் இந்திய மாணவர் எண்ணிக்கை அருகிவருவது கண்கூடு.
சீன, மலாய் மாணவர்களைவிட நாம் அறிவில் குறைந்தவர்களென்று தம்மையே தாழ்த்திக்கொண்டு படிப்பில் போட்டியின்றி மெளன நாடகம் நடத்துகின்ற மாணவர் நிறையவே உள்ளனர்.
இந்திய மாணவர்கள் என்றாலே பிரச்சனைகளின் பிரதிநிதிகளென்று இடைநிலைப்பள்ளியில் பெரும்பாலான ஆசிரியர்கள் முகஞ்சுளிக்கிறார்கள். மிகுதியான கட்டொழுங்குப் பிரச்சனைகளும் குறைவான தேர்ச்சி விகிதமும் அந்த முகச்சுளிப்பிற்கு மூலமாகிறது.
நம் மாணவர்கள் ஏவல் செய்யும் கூலிகளாகவே தகுதியானவர்கள்; கல்வியில் அக்கறையற்றவர்கள்; நல்லொழுக்கத்திலிருந்து நழுவிவிட்டவர்களென தப்பெண்ணம் பரவலாக உலாவருகிறது.
நாடு தழுவிய நிலையில் பல்லின ஆசிரியர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தபோது வெளிப்பட்ட குற்றச்சாட்டுகள்தான் மேலே நான் குறிப்பிட்டவை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
ஒரு சிலர் விதிவிலக்காகலாம் ஆனால் பெரும்பாலான நம்மின மாணவர் இன்னும் இருட்டில் உலவுகிறார்கள் என்றெண்ணத் தோன்றுகிறது. அன்பு மாணவர்களே, போனது போகட்டும் இனியாவது இதயத்தில் புதுவிளக்கேற்றுங்கள்.
காலக் கணக்கிலே கணநேரமும் ஓயாமல் கல்வியெனும் கற்கண்டை கருத்தாய் பயின்றிடுங்கள். கல்வி விளக்கு உங்கள் உள்ளங்களில் எரிகின்ற வரைக்கும் நம் சமுதாயம் சிறக்கும்.
வறுமைப் புயலிடையே ஒவ்வொரு கணமும் வேதனையால் வெந்திடும் உங்கள் பெற்றோர் அகம் மகிழவுக் காண இன்றே இலக்கைத் தீர்மானித்துவிடு; சீர்கெட்ட செயல்களின் வேரையழித்து கல்வி வேள்வியில் இதயத்தை நிறுத்திடு.
நன்செய் நிலத்தினில் களையிருந்தால் நீக்குவன் உழவன்; அதுபோல உங்கள் நலத்திலே நாசமென்றால் நீக்குவது என் கடமையன்றோ?.
கண்ணிருந்தும் குருடராய்க் காதிருந்தும் செவிடராய்க் கும்மிருட்டில் திரிகின்ற நம் மாணவ இனத்தைக் கைகொடுத்து நல்வழிக்காட்டும் பெரும்பொறுப்பு சமுதாய முழுமைக்குமுண்டு.
நாளையொரு புதிய விடியலுக்கு வித்திடப்போகிற நம்பிக்கை நட்சத்திரங்களே, உங்கள் இதயத்தோடு ஒரு சில வார்த்தைகள். ஒரு தாயின் அன்போடும் தந்தையின் எதிர்பார்ப்போடும் உங்கள் பள்ளி வாழ்க்கை ஏடுகளைப் புரட்டுகின்றேன்.
பள்ளிப் பாடங்களே பெருஞ்சுமையாகிவிட்ட இன்றைய சூழலில் பெற்றோரின் கனவுகளையும் சுமந்து கொண்டு நடைபோடும் உங்களைப் பார்க்கும்போது எனக்கும் வருத்தம் மேலிடுகிறது.
இந்த மனச்சுமையைச் சுகமாக மாற்றும் வல்லமையை நீங்கள் வளர்த்துக் கொள்வது தவிர மீள்வதற்கு வேறுவழியில்லை.
அன்பு பெற்றோர் எப்படியெல்லாம் அரும்பாடுபட்டு உங்களைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்று கொஞ்சம் ஆழ்மனத்தில் நிறுத்தி நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?.
உங்களின் ஒளிமயமான எதிர்காலமே முக்கியமென தங்கள் உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது அல்லும் பகலும் உழைக்கிறார்களே அந்தத் தியாக உள்ளங்களின் நம்பிக்கைகளை சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?
வெயில் மழை பாராமல் அத்தனை துன்பங்களையும் தனதாக ஏற்றுக்கொண்டு உங்களின் நலனே தன் சுகமென்று நம்பிக்கையில் கழிக்கும் அவர்களின் உள்மன ஆவலையாவது அறிந்துள்ளீர்களா?
படிக்கின்ற வயதினிலே கற்பனை தேரோடத்தில் சினிமா நாயகன் நாயகிப்போல் உங்களையே நீங்கள் வரித்துக்கொண்டு காதல் வலையில் வீழ்ந்து காமலீலையில் அழுகிப் போவதைப் பார்க்கும்போது இதயம் வலிக்கிறது.
தொன்றுத்தொட்டு நம் முன்னோர் சேர்த்து வைத்த பண்பாட்டுச் செழுமைகளைச் சிந்தையிலே நிறுத்தாமல் பள்ளிச் சந்தையிலே சீரழிக்கும் உங்களைப் போன்ற மாணவர்களின் எண்ணிக்கை சிறிதில்லை.
காடுமேடு கழனி திருத்தி நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி பெற்றக் குழந்தைகள் புவியோங்கப் பாடுபடும் பெற்ற மனங்களின் மனக்கோட்டைகளைச் சிதறடிக்கும் மாணவர் கூட்டத்திற்கு இப்போதும் குறைவில்லை.
கல்வியென்றாலே கசக்கும் கற்றவர் சொல் என்றாலே முகத்தைத் திருப்பும் முன்னோர் நெறிமறந்து உருமாறி இலக்கின்றி காற்றடித்தால் அலைக்கழிக்கும் இலவம் பஞ்சாய்ப்போன உங்களைப் போன்ற மாணவர் இந்நாளில் ஆன நெடுங்கதைகள் பலவுண்டு.
புனித புத்தகங்களைச் சுமக்கும் பையிலே சினிமா செறிவட்டுகளை சுமந்து சென்று சகாக்களோடு சினிமா ஆய்வரங்கம் செய்யும் மாணக்கரை நிறையவே சந்திக்கின்றேன்.
கணிதம் அறிவியல் என்றாலே புறமுதுகு காட்டி ஓடியதன் விளைவாக இன்று அறிவியல் பிரிவில் பயிலும் இந்திய மாணவர் எண்ணிக்கை அருகிவருவது கண்கூடு.
சீன, மலாய் மாணவர்களைவிட நாம் அறிவில் குறைந்தவர்களென்று தம்மையே தாழ்த்திக்கொண்டு படிப்பில் போட்டியின்றி மெளன நாடகம் நடத்துகின்ற மாணவர் நிறையவே உள்ளனர்.
இந்திய மாணவர்கள் என்றாலே பிரச்சனைகளின் பிரதிநிதிகளென்று இடைநிலைப்பள்ளியில் பெரும்பாலான ஆசிரியர்கள் முகஞ்சுளிக்கிறார்கள். மிகுதியான கட்டொழுங்குப் பிரச்சனைகளும் குறைவான தேர்ச்சி விகிதமும் அந்த முகச்சுளிப்பிற்கு மூலமாகிறது.
நம் மாணவர்கள் ஏவல் செய்யும் கூலிகளாகவே தகுதியானவர்கள்; கல்வியில் அக்கறையற்றவர்கள்; நல்லொழுக்கத்திலிருந்து நழுவிவிட்டவர்களென தப்பெண்ணம் பரவலாக உலாவருகிறது.
நாடு தழுவிய நிலையில் பல்லின ஆசிரியர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தபோது வெளிப்பட்ட குற்றச்சாட்டுகள்தான் மேலே நான் குறிப்பிட்டவை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
ஒரு சிலர் விதிவிலக்காகலாம் ஆனால் பெரும்பாலான நம்மின மாணவர் இன்னும் இருட்டில் உலவுகிறார்கள் என்றெண்ணத் தோன்றுகிறது. அன்பு மாணவர்களே, போனது போகட்டும் இனியாவது இதயத்தில் புதுவிளக்கேற்றுங்கள்.
காலக் கணக்கிலே கணநேரமும் ஓயாமல் கல்வியெனும் கற்கண்டை கருத்தாய் பயின்றிடுங்கள். கல்வி விளக்கு உங்கள் உள்ளங்களில் எரிகின்ற வரைக்கும் நம் சமுதாயம் சிறக்கும்.
வறுமைப் புயலிடையே ஒவ்வொரு கணமும் வேதனையால் வெந்திடும் உங்கள் பெற்றோர் அகம் மகிழவுக் காண இன்றே இலக்கைத் தீர்மானித்துவிடு; சீர்கெட்ட செயல்களின் வேரையழித்து கல்வி வேள்வியில் இதயத்தை நிறுத்திடு.
நன்செய் நிலத்தினில் களையிருந்தால் நீக்குவன் உழவன்; அதுபோல உங்கள் நலத்திலே நாசமென்றால் நீக்குவது என் கடமையன்றோ?.
கண்ணிருந்தும் குருடராய்க் காதிருந்தும் செவிடராய்க் கும்மிருட்டில் திரிகின்ற நம் மாணவ இனத்தைக் கைகொடுத்து நல்வழிக்காட்டும் பெரும்பொறுப்பு சமுதாய முழுமைக்குமுண்டு.
புதன், 8 ஏப்ரல், 2009
சங்கத் தமிழ் சாரம்
குறிஞ்சிப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டுயில் மொத்தம் 216 அடிகள் ஆகும்.வடநாட்டு அரசன் பிரகத்தன் என்பவனுக்குத் தமிழ் இலக்கிய மரபை உணர்த்துவத்ற்காக அவர் இந்தப் பாட்டை இயற்றினார் என்று பாட்டின் அடியின் பழங்காலக் குறிப்பு உள்ளது.இந்த பாட்டைப்பாடியவர்புலவர் கபிலர் ஆவார்.
பட்டினப் பாலை
பட்டினப்பாலை என்பது பத்துப்பாட்டில் உள்ள மற்றோர் அகப்பட்டு[காதல் துறைபற்றி அமைந்த கறபனைப் பாட்டு] ஆகும்.இந்நூலில் காவிரியாற்றின் வளமும்,காவிரிப்பூம்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளின் அழகும்,மேலும், அந்நகரில் வாழும் அந்தணர்,வணிகர், வேளாளர் மற்றும் பரதவர் போன்றோரின் பண்பு ஆகியவற்றைக் குறிப்பிடப்பட்டுள்ளது.இப்பாட்டு,சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியதாகும்.
நெடுநல்வாடை
இது 188 அடிகள் கொண்ட அகவற்பாவால் அமைந்த நூலாகும்.இதை,கற்பனைக் காதல் பாட்டு என்று கொண்டு ,அகப்பாட்டு என ஏற்கலாம்.அந்த அளவிற்குப் பழைய இலக்கிய மரபு இடந் தருகிறது.இதைப் பாடியவர் புகழ் பெற்ற சங்ககாலப் புலவர் நக்கீரர்.
மதுரைக்காஞ்சி
மதுரைக்காஞ்சி எனும் நூல்தான் மிகப் பெரிய பாட்டைக் கொண்டுள்ளது.இதில் மொத்தம் 782 அடிகள் ஆகும்.இதில் மதுரையை ஆண்ட மன்னனுக்கு உலக இன்பம்,பொருட்செல்வம், இளமை,யாக்கை என்பவை நிலையில்லாதவை என்னும் காஞ்சித்திணையை விவரித்துக் கூறுகிறது.இதை மாங்குடி மருதனார் என்பவர் பாடியுள்ளார்.
திருமுருகாற்றுப்படை
முருகக் கடவுளின் அருளைப் பெற்றவர் ஒருவர் அந்த அருளை நாடும் மற்றவர்க்கு வழிகாட்டுவதாக நக்கீரர் பாடிய பாட்டு.இது 314 அடிகள் கொண்டுயுள்ளது.இது சங்க காலத்தில் பக்தியுணர்ச்சி நிரம்பிய முழுநூல் ஆகும்.இது ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது .பரிபாடலில் முருகன் திருமால் ஆகியோரைப் பற்றிச் சில பாடல்கள் உள்ளது.பாட்டின் முடிவில் மலையிலிருந்து விழுந்து பாயும் அருவியின் காட்சி நம் உள்ளத்தைக் கவர்கிறது.முருகு என்ற சொல்லுக்கு முருகனாகிய தெய்வம் என்ற பொருளோடு அழகு என்னும் பொருளும் உண்டு என்பதை விளக்குகிறது.ஆயினும் திருமுருகாற்றுப்படையே நீண்ட பக்திப் பாடலாகச் சங்க இலக்கியத்தில் உள்ளது.
பொருநராற்றுப்படை
பொருநராற்றுப்படை என்பது சோழன் கரிகாலனின் சிறப்பைக் கூறுவது.இதில் 248 அடிகள் உடையது.சோழ நாட்டு மக்கள் இயற்றிவந்த தொழில் ,கலைவளம்,காவிரிச் செழிப்பு ஆகியவற்றை இந்நூல் எடுத்துரைக்கிறது.பொருநர் முதலான கலைஞர்களிடம் சோழன் கொண்ட அன்பும் காவிரியாற்றின் பெருமையும் இப்பாட்டால் விளங்குகின்றன.
சிறுபாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை 269 அடிகள் உடையது.பாணர் குடும்பத்தின் வறுமை அதில் சொல்லோவியமாக்க
ப்பட்டுள்ளது.இஃது ஓய்மாநாட்டு நல்லியக் கொடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது. அதில் பாரி. ஓரி, காரி, ஆய், அதியமான் நள்ளி ஆகியோரின் கொடைச் சிறப்பையும், நிலவளம், யாழின், வருணன், நல்லியக்கோடலின் தோளான்மையும் மற்றும் பாணை ஆதரிக்கும் அவனின் பெருமையும் ஆகியவை இந்நூலில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளன.
பரிபாடல்
இந்நூலில் 25 முதல் 40 அடி வரை உள்ளது. ஆசிரியப்பா,வஞ்சிப்பா,வெண்பா மற்றம் கலிப்பா என்று நான்கு பாவினங்கள் கலந்த ஒரு வகைபாடல். ஆனால், அதில் 25 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த நூலில் திருமாலையும் முருகனையும் பற்றி கூறப்படுகிறது.
புறநானூறு
இந்நூலுக்கு புறம்,புறப்பாட்டு,புறம்பு நானூறு என்று வேறு பெயர்களும் உண்டு. ஏறக்குறைய 160 புலவர்கள் இந்நூலில் பாடியுள்ளனர். பண்டைத் தமிழ் மக்களுடைய வாழ்வியல்,பழக்க வழக்கங்கள் பண்பாடு ஆகியவற்றையும் பண்டைய அரசியல்,வாணிகம்,சமயம், சமுதாய அமைப்பு போர் முறை, விழுமங்கள் ஆகியவற்றையம் புறநானூற்றுப் பாடல்கள் தெளிவுறுத்துகின்றன.
அகநானூறு
இந்நூலை நெடுந்தொகை என்றும் அழைக்கப்படுகிறது. இதில் 145 புலவர்கள் பாடியுள்ளனர். அகநானூறைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மானார் ஆவார். இந்நூலைத் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி ஆவார்.
கலித்தொகை
பாலைக் கலியைப் பெருங் கடுங்கோவும் குறிஞ்சிக் கலியைக் கபிலரும்,மருதக் கலியை மருதனிள நாகனாரும், முல்லைக் கலியைச் சோழன் நல்லுருத்திரனும், நெய்தற் கலியை நல்லுந்துவனாருமாக மொத்தம் 149 பாடல்களை இயற்றியுள்ளனர்.
குறுந்தொகை
ஐந்தினை தழுவிய 400 பாக்கள் ஊள்ளது. இதில் 205 புலவர்கள் இருக்கின்றன.
இந்தக் குறுந்தொகையைத் தொகுப்பித்தவர் பூரிக்கோ ஆவர். தொகை நூல்களுள் முதன்முதலில் தொகுக்கப்பட்ட நூலாக குறுந்தொகை அமையலாம் என்று கூறப்படுகிறது.
நற்றினை
400 பாடல் ஐந்தினை தழுவிய பாடல்களாக இருந்தன. 275 புலவர்கள் அதில் பாடியுள்ளன. இதை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவர். ஆனால் நற்றினையின் தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை.
பெரும்பாணாற்றுப்படை
அது 500 அடிகள் உடையது .அது பாணர் குடும்பத்தைப் பற்றி விளக்குவதாம்.இளந்திரையன் என்னும் அரசனுடைய ஆட்சிச் சிறப்பைப் பற்றியும் ,அவனுடைய நாட்டின் இயல்புபற்றியும், கடற்கரைப் பட்டினம் பற்றியும் அங்கு இருந்த கலங்கரை விளக்கம்ப்பற்றியும் மலைவளம்பற்றியும் இந்த பட்டால் அறியலாம். பாணனைத் தொண்டைமான் இளந்திரையின் பால் ஆற்றுப்படுத்துவதாக கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற புலவர் பாடியது.
மலைபடுகடாம்
மலைபடுகடாம் என்பது கூத்தர் குடும்பத்தைப்பற்றிய ஆற்றுப்படை ஆகும்.அது 583 அடிகள் உடையது. இது கூத்தராற்றுப்படை என்றும் கூறப்படும்.ஒரு மலையின் பிறக்கும் பலவகை ஓசைகள் இதில் விளக்கப்படுகின்றன.மலைபடுகடாம் என்ற அந்தப் பெயர் கற்பனை நயம் வாய்ந்ததாக உள்ளது. இந்த நூலில் கூத்தருடைய இசைக் கருவிகளும் கலைவாழ்க்கையும் விளக்கப்படுகின்றன.
முல்லைப்பாட்டு
முல்லைப்பாட்டு 103 அடிகள் உடையது.பத்துப்பாட்டில் உள்ள அகப்பாட்டுகளுள் (காதல் பற்றிய பாட்டுகளுள்)சிறந்தவை முல்லைப்பாட்டும் குறிஞ்சிப்பாட்டும் ஆகும்.அகப்பொருள் ஆகிய காதல் ஒன்றை விளக்குவதே இவற்றின் நோக்கம்.இந்த நூலின் ஆசிரியரின் பெயர் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்
குறிஞ்சிப்பாட்டுயில் மொத்தம் 216 அடிகள் ஆகும்.வடநாட்டு அரசன் பிரகத்தன் என்பவனுக்குத் தமிழ் இலக்கிய மரபை உணர்த்துவத்ற்காக அவர் இந்தப் பாட்டை இயற்றினார் என்று பாட்டின் அடியின் பழங்காலக் குறிப்பு உள்ளது.இந்த பாட்டைப்பாடியவர்புலவர் கபிலர் ஆவார்.
பட்டினப் பாலை
பட்டினப்பாலை என்பது பத்துப்பாட்டில் உள்ள மற்றோர் அகப்பட்டு[காதல் துறைபற்றி அமைந்த கறபனைப் பாட்டு] ஆகும்.இந்நூலில் காவிரியாற்றின் வளமும்,காவிரிப்பூம்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளின் அழகும்,மேலும், அந்நகரில் வாழும் அந்தணர்,வணிகர், வேளாளர் மற்றும் பரதவர் போன்றோரின் பண்பு ஆகியவற்றைக் குறிப்பிடப்பட்டுள்ளது.இப்பாட்டு,சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியதாகும்.
நெடுநல்வாடை
இது 188 அடிகள் கொண்ட அகவற்பாவால் அமைந்த நூலாகும்.இதை,கற்பனைக் காதல் பாட்டு என்று கொண்டு ,அகப்பாட்டு என ஏற்கலாம்.அந்த அளவிற்குப் பழைய இலக்கிய மரபு இடந் தருகிறது.இதைப் பாடியவர் புகழ் பெற்ற சங்ககாலப் புலவர் நக்கீரர்.
மதுரைக்காஞ்சி
மதுரைக்காஞ்சி எனும் நூல்தான் மிகப் பெரிய பாட்டைக் கொண்டுள்ளது.இதில் மொத்தம் 782 அடிகள் ஆகும்.இதில் மதுரையை ஆண்ட மன்னனுக்கு உலக இன்பம்,பொருட்செல்வம், இளமை,யாக்கை என்பவை நிலையில்லாதவை என்னும் காஞ்சித்திணையை விவரித்துக் கூறுகிறது.இதை மாங்குடி மருதனார் என்பவர் பாடியுள்ளார்.
திருமுருகாற்றுப்படை
முருகக் கடவுளின் அருளைப் பெற்றவர் ஒருவர் அந்த அருளை நாடும் மற்றவர்க்கு வழிகாட்டுவதாக நக்கீரர் பாடிய பாட்டு.இது 314 அடிகள் கொண்டுயுள்ளது.இது சங்க காலத்தில் பக்தியுணர்ச்சி நிரம்பிய முழுநூல் ஆகும்.இது ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது .பரிபாடலில் முருகன் திருமால் ஆகியோரைப் பற்றிச் சில பாடல்கள் உள்ளது.பாட்டின் முடிவில் மலையிலிருந்து விழுந்து பாயும் அருவியின் காட்சி நம் உள்ளத்தைக் கவர்கிறது.முருகு என்ற சொல்லுக்கு முருகனாகிய தெய்வம் என்ற பொருளோடு அழகு என்னும் பொருளும் உண்டு என்பதை விளக்குகிறது.ஆயினும் திருமுருகாற்றுப்படையே நீண்ட பக்திப் பாடலாகச் சங்க இலக்கியத்தில் உள்ளது.
பொருநராற்றுப்படை
பொருநராற்றுப்படை என்பது சோழன் கரிகாலனின் சிறப்பைக் கூறுவது.இதில் 248 அடிகள் உடையது.சோழ நாட்டு மக்கள் இயற்றிவந்த தொழில் ,கலைவளம்,காவிரிச் செழிப்பு ஆகியவற்றை இந்நூல் எடுத்துரைக்கிறது.பொருநர் முதலான கலைஞர்களிடம் சோழன் கொண்ட அன்பும் காவிரியாற்றின் பெருமையும் இப்பாட்டால் விளங்குகின்றன.
சிறுபாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை 269 அடிகள் உடையது.பாணர் குடும்பத்தின் வறுமை அதில் சொல்லோவியமாக்க
ப்பட்டுள்ளது.இஃது ஓய்மாநாட்டு நல்லியக் கொடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது. அதில் பாரி. ஓரி, காரி, ஆய், அதியமான் நள்ளி ஆகியோரின் கொடைச் சிறப்பையும், நிலவளம், யாழின், வருணன், நல்லியக்கோடலின் தோளான்மையும் மற்றும் பாணை ஆதரிக்கும் அவனின் பெருமையும் ஆகியவை இந்நூலில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளன.
பரிபாடல்
இந்நூலில் 25 முதல் 40 அடி வரை உள்ளது. ஆசிரியப்பா,வஞ்சிப்பா,வெண்பா மற்றம் கலிப்பா என்று நான்கு பாவினங்கள் கலந்த ஒரு வகைபாடல். ஆனால், அதில் 25 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த நூலில் திருமாலையும் முருகனையும் பற்றி கூறப்படுகிறது.
புறநானூறு
இந்நூலுக்கு புறம்,புறப்பாட்டு,புறம்பு நானூறு என்று வேறு பெயர்களும் உண்டு. ஏறக்குறைய 160 புலவர்கள் இந்நூலில் பாடியுள்ளனர். பண்டைத் தமிழ் மக்களுடைய வாழ்வியல்,பழக்க வழக்கங்கள் பண்பாடு ஆகியவற்றையும் பண்டைய அரசியல்,வாணிகம்,சமயம், சமுதாய அமைப்பு போர் முறை, விழுமங்கள் ஆகியவற்றையம் புறநானூற்றுப் பாடல்கள் தெளிவுறுத்துகின்றன.
அகநானூறு
இந்நூலை நெடுந்தொகை என்றும் அழைக்கப்படுகிறது. இதில் 145 புலவர்கள் பாடியுள்ளனர். அகநானூறைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மானார் ஆவார். இந்நூலைத் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி ஆவார்.
கலித்தொகை
பாலைக் கலியைப் பெருங் கடுங்கோவும் குறிஞ்சிக் கலியைக் கபிலரும்,மருதக் கலியை மருதனிள நாகனாரும், முல்லைக் கலியைச் சோழன் நல்லுருத்திரனும், நெய்தற் கலியை நல்லுந்துவனாருமாக மொத்தம் 149 பாடல்களை இயற்றியுள்ளனர்.
குறுந்தொகை
ஐந்தினை தழுவிய 400 பாக்கள் ஊள்ளது. இதில் 205 புலவர்கள் இருக்கின்றன.
இந்தக் குறுந்தொகையைத் தொகுப்பித்தவர் பூரிக்கோ ஆவர். தொகை நூல்களுள் முதன்முதலில் தொகுக்கப்பட்ட நூலாக குறுந்தொகை அமையலாம் என்று கூறப்படுகிறது.
நற்றினை
400 பாடல் ஐந்தினை தழுவிய பாடல்களாக இருந்தன. 275 புலவர்கள் அதில் பாடியுள்ளன. இதை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவர். ஆனால் நற்றினையின் தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை.
பெரும்பாணாற்றுப்படை
அது 500 அடிகள் உடையது .அது பாணர் குடும்பத்தைப் பற்றி விளக்குவதாம்.இளந்திரையன் என்னும் அரசனுடைய ஆட்சிச் சிறப்பைப் பற்றியும் ,அவனுடைய நாட்டின் இயல்புபற்றியும், கடற்கரைப் பட்டினம் பற்றியும் அங்கு இருந்த கலங்கரை விளக்கம்ப்பற்றியும் மலைவளம்பற்றியும் இந்த பட்டால் அறியலாம். பாணனைத் தொண்டைமான் இளந்திரையின் பால் ஆற்றுப்படுத்துவதாக கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற புலவர் பாடியது.
மலைபடுகடாம்
மலைபடுகடாம் என்பது கூத்தர் குடும்பத்தைப்பற்றிய ஆற்றுப்படை ஆகும்.அது 583 அடிகள் உடையது. இது கூத்தராற்றுப்படை என்றும் கூறப்படும்.ஒரு மலையின் பிறக்கும் பலவகை ஓசைகள் இதில் விளக்கப்படுகின்றன.மலைபடுகடாம் என்ற அந்தப் பெயர் கற்பனை நயம் வாய்ந்ததாக உள்ளது. இந்த நூலில் கூத்தருடைய இசைக் கருவிகளும் கலைவாழ்க்கையும் விளக்கப்படுகின்றன.
முல்லைப்பாட்டு
முல்லைப்பாட்டு 103 அடிகள் உடையது.பத்துப்பாட்டில் உள்ள அகப்பாட்டுகளுள் (காதல் பற்றிய பாட்டுகளுள்)சிறந்தவை முல்லைப்பாட்டும் குறிஞ்சிப்பாட்டும் ஆகும்.அகப்பொருள் ஆகிய காதல் ஒன்றை விளக்குவதே இவற்றின் நோக்கம்.இந்த நூலின் ஆசிரியரின் பெயர் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்
செவ்வாய், 7 ஏப்ரல், 2009
குடும்பம் ஒரு கோயில்
உறவுகளின் தொகுப்பாய் உருவெடுத்ததுதான் குடும்பம். தாத்தா-பாட்டி தொடங்கி பேரன்-பேத்தி என ஆலமரமாய் ஆயிரம் விழுது பரப்பிய குடும்பம்தான் இன்று உறவுகளைத் தவிர்த்து ஒற்றைப் பனை மரமாய் ஒதுங்கி நிற்கிறது.
அன்பின் அடித்தளத்தில் எழுந்து நின்ற குடும்பக் கோவில் இன்று பொருள் தேட்டம், இன்ப நாட்டம் என்ற அந்நியக் கலாச்சாரச் சூறைக் காற்றில் ஆட்டங்கண்டு சிறந்த விழுமங்களை இழந்து விழுந்து கிடக்கிறது.
நம் முன்னோர்களின் இல்லற வாழ்வை இனிதாகக் காட்டுவது திருக்குறள். அறம் சார்ந்த வாழ்வும், அன்பு சார்ந்த உறவுந்தான் தமிழர்தம் குடும்பங்களின் அடித்தளம். ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்று நினைத்தவன்தான் தமிழன்.
’அன்பின் வழியது உயிர்நிலை’ வாழ்ந்தவன்தான் தமிழன். அகவாழ்வின் பண்பாடும், புறவாழ்வின் நாகரிகமும் பழுதுபடாமல் பார்த்துக் கொண்டதுதான் தமிழினம். ஆனால் இன்று நினைக்கவே நெஞ்சம் நோகிறது.
ஆணும் பெண்ணும் சேர்ந்து, அன்பு சார்ந்து, அறத்தின் வழியில் நடத்துவதுதான் இல்லறம். ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழும் இடம்தான் வீடு. துன்பங்களிலிருந்து விடுபட்டு, ஆன்மா பேரின்பத்தில் திளைப்பதுதான் வீடுபேறு.
இறந்த பின்பு அடையும் இன்பத்தை இருக்கும்போதே அடைவதற்கான இடமே வீடு. துன்ப நீக்கமும் இன்ப ஆக்க்மும் உள்ள இடம்தான் உண்மையான வீடு.
குடும்ப வீணையின் ஆதாரசுருதி என்றுமே பெண்தான், அதனால்தான் ‘மனைக்கு விளக்கம் மடவாள்’ என்கிறது நான்மணிக்கடிகை. ‘இல்லதென் இல்லவள் மாண்பானால்?’ என்று வினாத் தொடுக்கிறது வள்ளுவம்.’ இல்லாள் அகத்திருக்க இல்லாதத்தொன்றில்லை’ எனும் உண்மையை அறியாத தமிழ்ர் இல்லை.
ஆண் மட்டும் இருக்கும் இடத்தைக் குடும்பம் என்று யாரும் குறிப்பிடுவதில்லை. ‘சிறந்த மனையாளை இல்லாதான் இல் அதர் காண்டற்கரியதோர் காடு’ என்கிறது நம் நாலடியார்.
‘இல்லறம் என்பது கற்புடைய மனைவியோடு இல்லின்கண் இருந்து செய்யும் அறம்’ என்கிறார் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு ந்ல்லார். ‘இல்லறமல்லது நல்லறமன்று’ என்று ஔவை சொன்னதன் நோக்கமே பெண்ணின் பெருமையைப் போற்றுவதுதான்.
அடக்கம், பொறுமை, தியாகம், இரக்கம், பிறர்நலம், தொண்டு அனைத்தும் கலந்த கலவையே பெண். அவளுடைய தலைமையில் இயங்குவடனால்தான் இல்லறம் நல்லறமாகிறது.
குடும்பம் கோவிலாவதும், குப்பை மேடாவதும் பெண்ணின் கைகளில்தான் இருக்கிறது. பெண்ணின் சிந்தையணு ஒவ்வொன்றிலும் நீக்கமற நிறைந்திருப்பது குடும்ப நலன்தான் என்பதை ‘குடும்ப விளக்கில்’ பாரதிதாசன் அற்புதமாகக் காட்டுவார்.
‘முத்தர் மனமிருக்கும் மோனத்தே வித்தகமாய்க் காதி விளையாடி இரு கைவீசி வந்தாலும் தாதி மனம் நீர்க்குடத்தே தான்’ என்ற பட்டினத்தார் வரிகளுக்கேற்ப எந்நிலையிலும் தலையில் தண்ணீர்க்குடம் சுமந்து வரும் பெண்ணின் சிந்தனை நீர்க்குடத்தில் இருப்பதுபோல பெண்ணின் நெஞ்ச முழுவதும் குடும்ப சிந்தனைதான்
‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ என்றும் ’ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ பென்ணின ஏற்றத்திற்கே முரசு கொட்டினானே முண்டாசுக் கவி பாரதி. பெண் எனும் ஆக்க சக்தி அன்பும் இனிமையும் நிறைந்த புதுவுலகை உருவாக்கவல்லது என்று நம் முன்னோர்கள் உணர்ந்து போற்றியுள்ளது தமிழர் வாழ்வியலை ஊடுருவி பார்த்தால் தெள்ளிதின் விளங்கும்.
அன்பின் அடித்தளத்தில் எழுந்து நின்ற குடும்பக் கோவில் இன்று பொருள் தேட்டம், இன்ப நாட்டம் என்ற அந்நியக் கலாச்சாரச் சூறைக் காற்றில் ஆட்டங்கண்டு சிறந்த விழுமங்களை இழந்து விழுந்து கிடக்கிறது.
நம் முன்னோர்களின் இல்லற வாழ்வை இனிதாகக் காட்டுவது திருக்குறள். அறம் சார்ந்த வாழ்வும், அன்பு சார்ந்த உறவுந்தான் தமிழர்தம் குடும்பங்களின் அடித்தளம். ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்று நினைத்தவன்தான் தமிழன்.
’அன்பின் வழியது உயிர்நிலை’ வாழ்ந்தவன்தான் தமிழன். அகவாழ்வின் பண்பாடும், புறவாழ்வின் நாகரிகமும் பழுதுபடாமல் பார்த்துக் கொண்டதுதான் தமிழினம். ஆனால் இன்று நினைக்கவே நெஞ்சம் நோகிறது.
ஆணும் பெண்ணும் சேர்ந்து, அன்பு சார்ந்து, அறத்தின் வழியில் நடத்துவதுதான் இல்லறம். ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழும் இடம்தான் வீடு. துன்பங்களிலிருந்து விடுபட்டு, ஆன்மா பேரின்பத்தில் திளைப்பதுதான் வீடுபேறு.
இறந்த பின்பு அடையும் இன்பத்தை இருக்கும்போதே அடைவதற்கான இடமே வீடு. துன்ப நீக்கமும் இன்ப ஆக்க்மும் உள்ள இடம்தான் உண்மையான வீடு.
குடும்ப வீணையின் ஆதாரசுருதி என்றுமே பெண்தான், அதனால்தான் ‘மனைக்கு விளக்கம் மடவாள்’ என்கிறது நான்மணிக்கடிகை. ‘இல்லதென் இல்லவள் மாண்பானால்?’ என்று வினாத் தொடுக்கிறது வள்ளுவம்.’ இல்லாள் அகத்திருக்க இல்லாதத்தொன்றில்லை’ எனும் உண்மையை அறியாத தமிழ்ர் இல்லை.
ஆண் மட்டும் இருக்கும் இடத்தைக் குடும்பம் என்று யாரும் குறிப்பிடுவதில்லை. ‘சிறந்த மனையாளை இல்லாதான் இல் அதர் காண்டற்கரியதோர் காடு’ என்கிறது நம் நாலடியார்.
‘இல்லறம் என்பது கற்புடைய மனைவியோடு இல்லின்கண் இருந்து செய்யும் அறம்’ என்கிறார் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு ந்ல்லார். ‘இல்லறமல்லது நல்லறமன்று’ என்று ஔவை சொன்னதன் நோக்கமே பெண்ணின் பெருமையைப் போற்றுவதுதான்.
அடக்கம், பொறுமை, தியாகம், இரக்கம், பிறர்நலம், தொண்டு அனைத்தும் கலந்த கலவையே பெண். அவளுடைய தலைமையில் இயங்குவடனால்தான் இல்லறம் நல்லறமாகிறது.
குடும்பம் கோவிலாவதும், குப்பை மேடாவதும் பெண்ணின் கைகளில்தான் இருக்கிறது. பெண்ணின் சிந்தையணு ஒவ்வொன்றிலும் நீக்கமற நிறைந்திருப்பது குடும்ப நலன்தான் என்பதை ‘குடும்ப விளக்கில்’ பாரதிதாசன் அற்புதமாகக் காட்டுவார்.
‘முத்தர் மனமிருக்கும் மோனத்தே வித்தகமாய்க் காதி விளையாடி இரு கைவீசி வந்தாலும் தாதி மனம் நீர்க்குடத்தே தான்’ என்ற பட்டினத்தார் வரிகளுக்கேற்ப எந்நிலையிலும் தலையில் தண்ணீர்க்குடம் சுமந்து வரும் பெண்ணின் சிந்தனை நீர்க்குடத்தில் இருப்பதுபோல பெண்ணின் நெஞ்ச முழுவதும் குடும்ப சிந்தனைதான்
‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ என்றும் ’ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ பென்ணின ஏற்றத்திற்கே முரசு கொட்டினானே முண்டாசுக் கவி பாரதி. பெண் எனும் ஆக்க சக்தி அன்பும் இனிமையும் நிறைந்த புதுவுலகை உருவாக்கவல்லது என்று நம் முன்னோர்கள் உணர்ந்து போற்றியுள்ளது தமிழர் வாழ்வியலை ஊடுருவி பார்த்தால் தெள்ளிதின் விளங்கும்.
தந்தைக்கு நினைவாஞ்சலி
‘அப்பா’வென்று என்செல்லக் குழந்தைகள் அழைக்கையிலே
அப்பாநின் அன்பான முகந்தான் என்னுள் முகிழ்கிறது
இதயம் இழப்பால் துடிக்கிறது; கண்கள் அன்பால் கசிகிறது
இழந்த உன்னை எண்ணி உயிருமுருகிப் போனது
தந்தையாய் அறிவுத்தந்தாய்; அன்பும் குழைத்தூட்டினாய்
தென்றலாய் ஆரத்தழுவினாய்; தேன்பாகாய் என்றும் இனித்தாய்
ஆவித்துடிக்குது இன்றும் உனைக்காண நினைக்குது நெஞ்சம்
ஆயிரமாண்டு அழுதாலும் உனைக்காண தீராது ஏக்கம்
குடும்பத்தை ஆலமரமாய் நிழல்தந்து காத்த பாசதீபமே
தந்தையாய் தாங்கி பொறுமையால் எனைக் காத்த தெய்வமே
அதிர்ந்தொருசொல் கேட்டதில்லை அன்பாலேயாளும் சுடரே
அருள் விழிகளும் உன்னமைதித் திருமகமும் குளிர்தருவே
சிவனுள் கரைந்தாய் முருகனுள் கலந்தாய் நற்பணிக்கே அர்ப்பணித்தாய்
சீர்மிகுவாழ்வுக்கு இறையருள் தானென்று நாளும் சொன்னாய்
என்றும் மூச்சில் உணர்வில் உயிரில் கலந்தினிக்கும் அருள்விருந்தே
என்றினி வாய்க்குமோ ஒருபொழுது உனைக்காண அன்புருவே
எண்பது தொடுமுன்னே எட்டாதூரம் எனைவிட்டு போனதேனப்பா
எல்லாமிருந்தும் நீயில்லாமல் இருப்பதிங்கு வெறுமைதானப்பா
நாளும் உன்னினைவுகள்தாம் என்னுள் மெழுகாய் உருகுதப்பா
நன்றிசொல்லி உன்திருவடியை என்றும் வணங்கி தொழுவேனப்பா
(கழிந்த 23.3.2009 ஆம் பக்கல் இரவு 10.40க்கு உயிர் நீத்த என் தந்தைக்கு அஞ்சலியாக இந்த கவிதையைச் சமர்ப்பிக்கின்றேன். எனக்கு உடலும் உயிரும் ஈந்த என் தந்தையைப் பற்றி எழுதுவதற்கு நிறைய உள்ளன..அவரிடம் நான் பெற்றவற்றை நன்றியோடு பிறிதொருகால் பகிர்ந்து கொள்கிறேன்.. என் தந்தையின் இறப்பு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அனுதாபத்தை நேரிலும் குறுஞ்செய்தியிலும் தொலைநகலிலும் தெரிவித்த அன்பர்களுக்கும் நன்றிகள் உரித்தாக்குகின்றேன்.)
அப்பாநின் அன்பான முகந்தான் என்னுள் முகிழ்கிறது
இதயம் இழப்பால் துடிக்கிறது; கண்கள் அன்பால் கசிகிறது
இழந்த உன்னை எண்ணி உயிருமுருகிப் போனது
தந்தையாய் அறிவுத்தந்தாய்; அன்பும் குழைத்தூட்டினாய்
தென்றலாய் ஆரத்தழுவினாய்; தேன்பாகாய் என்றும் இனித்தாய்
ஆவித்துடிக்குது இன்றும் உனைக்காண நினைக்குது நெஞ்சம்
ஆயிரமாண்டு அழுதாலும் உனைக்காண தீராது ஏக்கம்
குடும்பத்தை ஆலமரமாய் நிழல்தந்து காத்த பாசதீபமே
தந்தையாய் தாங்கி பொறுமையால் எனைக் காத்த தெய்வமே
அதிர்ந்தொருசொல் கேட்டதில்லை அன்பாலேயாளும் சுடரே
அருள் விழிகளும் உன்னமைதித் திருமகமும் குளிர்தருவே
சிவனுள் கரைந்தாய் முருகனுள் கலந்தாய் நற்பணிக்கே அர்ப்பணித்தாய்
சீர்மிகுவாழ்வுக்கு இறையருள் தானென்று நாளும் சொன்னாய்
என்றும் மூச்சில் உணர்வில் உயிரில் கலந்தினிக்கும் அருள்விருந்தே
என்றினி வாய்க்குமோ ஒருபொழுது உனைக்காண அன்புருவே
எண்பது தொடுமுன்னே எட்டாதூரம் எனைவிட்டு போனதேனப்பா
எல்லாமிருந்தும் நீயில்லாமல் இருப்பதிங்கு வெறுமைதானப்பா
நாளும் உன்னினைவுகள்தாம் என்னுள் மெழுகாய் உருகுதப்பா
நன்றிசொல்லி உன்திருவடியை என்றும் வணங்கி தொழுவேனப்பா
(கழிந்த 23.3.2009 ஆம் பக்கல் இரவு 10.40க்கு உயிர் நீத்த என் தந்தைக்கு அஞ்சலியாக இந்த கவிதையைச் சமர்ப்பிக்கின்றேன். எனக்கு உடலும் உயிரும் ஈந்த என் தந்தையைப் பற்றி எழுதுவதற்கு நிறைய உள்ளன..அவரிடம் நான் பெற்றவற்றை நன்றியோடு பிறிதொருகால் பகிர்ந்து கொள்கிறேன்.. என் தந்தையின் இறப்பு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அனுதாபத்தை நேரிலும் குறுஞ்செய்தியிலும் தொலைநகலிலும் தெரிவித்த அன்பர்களுக்கும் நன்றிகள் உரித்தாக்குகின்றேன்.)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)