புதன், 8 ஏப்ரல், 2009

சங்கத் தமிழ் சாரம்

குறிஞ்சிப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டுயில் மொத்தம் 216 அடிகள் ஆகும்.வடநாட்டு அரசன் பிரகத்தன் என்பவனுக்குத் தமிழ் இலக்கிய மரபை உணர்த்துவத்ற்காக அவர் இந்தப் பாட்டை இயற்றினார் என்று பாட்டின் அடியின் பழங்காலக் குறிப்பு உள்ளது.இந்த பாட்டைப்பாடியவர்புலவர் கபிலர் ஆவார்.

பட்டினப் பாலை
பட்டினப்பாலை என்பது பத்துப்பாட்டில் உள்ள மற்றோர் அகப்பட்டு[காதல் துறைபற்றி அமைந்த கறபனைப் பாட்டு] ஆகும்.இந்நூலில் காவிரியாற்றின் வளமும்,காவிரிப்பூம்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளின் அழகும்,மேலும், அந்நகரில் வாழும் அந்தணர்,வணிகர், வேளாளர் மற்றும் பரதவர் போன்றோரின் பண்பு ஆகியவற்றைக் குறிப்பிடப்பட்டுள்ளது.இப்பாட்டு,சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியதாகும்.

நெடுநல்வாடை
இது 188 அடிகள் கொண்ட அகவற்பாவால் அமைந்த நூலாகும்.இதை,கற்பனைக் காதல் பாட்டு என்று கொண்டு ,அகப்பாட்டு என ஏற்கலாம்.அந்த அளவிற்குப் பழைய இலக்கிய மரபு இடந் தருகிறது.இதைப் பாடியவர் புகழ் பெற்ற சங்ககாலப் புலவர் நக்கீரர்.

மதுரைக்காஞ்சி
மதுரைக்காஞ்சி எனும் நூல்தான் மிகப் பெரிய பாட்டைக் கொண்டுள்ளது.இதில் மொத்தம் 782 அடிகள் ஆகும்.இதில் மதுரையை ஆண்ட மன்னனுக்கு உலக இன்பம்,பொருட்செல்வம், இளமை,யாக்கை என்பவை நிலையில்லாதவை என்னும் காஞ்சித்திணையை விவரித்துக் கூறுகிறது.இதை மாங்குடி மருதனார் என்பவர் பாடியுள்ளார்.

திருமுருகாற்றுப்படை
முருகக் கடவுளின் அருளைப் பெற்றவர் ஒருவர் அந்த அருளை நாடும் மற்றவர்க்கு வழிகாட்டுவதாக நக்கீரர் பாடிய பாட்டு.இது 314 அடிகள் கொண்டுயுள்ளது.இது சங்க காலத்தில் பக்தியுணர்ச்சி நிரம்பிய முழுநூல் ஆகும்.இது ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது .பரிபாடலில் முருகன் திருமால் ஆகியோரைப் பற்றிச் சில பாடல்கள் உள்ளது.பாட்டின் முடிவில் மலையிலிருந்து விழுந்து பாயும் அருவியின் காட்சி நம் உள்ளத்தைக் கவர்கிறது.முருகு என்ற சொல்லுக்கு முருகனாகிய தெய்வம் என்ற பொருளோடு அழகு என்னும் பொருளும் உண்டு என்பதை விளக்குகிறது.ஆயினும் திருமுருகாற்றுப்படையே நீண்ட பக்திப் பாடலாகச் சங்க இலக்கியத்தில் உள்ளது.

பொருநராற்றுப்படை
பொருநராற்றுப்படை என்பது சோழன் கரிகாலனின் சிறப்பைக் கூறுவது.இதில் 248 அடிகள் உடையது.சோழ நாட்டு மக்கள் இயற்றிவந்த தொழில் ,கலைவளம்,காவிரிச் செழிப்பு ஆகியவற்றை இந்நூல் எடுத்துரைக்கிறது.பொருநர் முதலான கலைஞர்களிடம் சோழன் கொண்ட அன்பும் காவிரியாற்றின் பெருமையும் இப்பாட்டால் விளங்குகின்றன.

சிறுபாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை 269 அடிகள் உடையது.பாணர் குடும்பத்தின் வறுமை அதில் சொல்லோவியமாக்க
ப்பட்டுள்ளது.இஃது ஓய்மாநாட்டு நல்லியக் கொடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது. அதில் பாரி. ஓரி, காரி, ஆய், அதியமான் நள்ளி ஆகியோரின் கொடைச் சிறப்பையும், நிலவளம், யாழின், வருணன், நல்லியக்கோடலின் தோளான்மையும் மற்றும் பாணை ஆதரிக்கும் அவனின் பெருமையும் ஆகியவை இந்நூலில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளன.


பரிபாடல்
இந்நூலில் 25 முதல் 40 அடி வரை உள்ளது. ஆசிரியப்பா,வஞ்சிப்பா,வெண்பா மற்றம் கலிப்பா என்று நான்கு பாவினங்கள் கலந்த ஒரு வகைபாடல். ஆனால், அதில் 25 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த நூலில் திருமாலையும் முருகனையும் பற்றி கூறப்படுகிறது.

புறநானூறு
இந்நூலுக்கு புறம்,புறப்பாட்டு,புறம்பு நானூறு என்று வேறு பெயர்களும் உண்டு. ஏறக்குறைய 160 புலவர்கள் இந்நூலில் பாடியுள்ளனர். பண்டைத் தமிழ் மக்களுடைய வாழ்வியல்,பழக்க வழக்கங்கள் பண்பாடு ஆகியவற்றையும் பண்டைய அரசியல்,வாணிகம்,சமயம், சமுதாய அமைப்பு போர் முறை, விழுமங்கள் ஆகியவற்றையம் புறநானூற்றுப் பாடல்கள் தெளிவுறுத்துகின்றன.

அகநானூறு
இந்நூலை நெடுந்தொகை என்றும் அழைக்கப்படுகிறது. இதில் 145 புலவர்கள் பாடியுள்ளனர். அகநானூறைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மானார் ஆவார். இந்நூலைத் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி ஆவார்.

கலித்தொகை
பாலைக் கலியைப் பெருங் கடுங்கோவும் குறிஞ்சிக் கலியைக் கபிலரும்,மருதக் கலியை மருதனிள நாகனாரும், முல்லைக் கலியைச் சோழன் நல்லுருத்திரனும், நெய்தற் கலியை நல்லுந்துவனாருமாக மொத்தம் 149 பாடல்களை இயற்றியுள்ளனர்.

குறுந்தொகை
ஐந்தினை தழுவிய 400 பாக்கள் ஊள்ளது. இதில் 205 புலவர்கள் இருக்கின்றன.
இந்தக் குறுந்தொகையைத் தொகுப்பித்தவர் பூரிக்கோ ஆவர். தொகை நூல்களுள் முதன்முதலில் தொகுக்கப்பட்ட நூலாக குறுந்தொகை அமையலாம் என்று கூறப்படுகிறது.

நற்றினை
400 பாடல் ஐந்தினை தழுவிய பாடல்களாக இருந்தன. 275 புலவர்கள் அதில் பாடியுள்ளன. இதை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவர். ஆனால் நற்றினையின் தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை.

பெரும்பாணாற்றுப்படை
அது 500 அடிகள் உடையது .அது பாணர் குடும்பத்தைப் பற்றி விளக்குவதாம்.இளந்திரையன் என்னும் அரசனுடைய ஆட்சிச் சிறப்பைப் பற்றியும் ,அவனுடைய நாட்டின் இயல்புபற்றியும், கடற்கரைப் பட்டினம் பற்றியும் அங்கு இருந்த கலங்கரை விளக்கம்ப்பற்றியும் மலைவளம்பற்றியும் இந்த பட்டால் அறியலாம். பாணனைத் தொண்டைமான் இளந்திரையின் பால் ஆற்றுப்படுத்துவதாக கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற புலவர் பாடியது.

மலைபடுகடாம்
மலைபடுகடாம் என்பது கூத்தர் குடும்பத்தைப்பற்றிய ஆற்றுப்படை ஆகும்.அது 583 அடிகள் உடையது. இது கூத்தராற்றுப்படை என்றும் கூறப்படும்.ஒரு மலையின் பிறக்கும் பலவகை ஓசைகள் இதில் விளக்கப்படுகின்றன.மலைபடுகடாம் என்ற அந்தப் பெயர் கற்பனை நயம் வாய்ந்ததாக உள்ளது. இந்த நூலில் கூத்தருடைய இசைக் கருவிகளும் கலைவாழ்க்கையும் விளக்கப்படுகின்றன.

முல்லைப்பாட்டு
முல்லைப்பாட்டு 103 அடிகள் உடையது.பத்துப்பாட்டில் உள்ள அகப்பாட்டுகளுள் (காதல் பற்றிய பாட்டுகளுள்)சிறந்தவை முல்லைப்பாட்டும் குறிஞ்சிப்பாட்டும் ஆகும்.அகப்பொருள் ஆகிய காதல் ஒன்றை விளக்குவதே இவற்றின் நோக்கம்.இந்த நூலின் ஆசிரியரின் பெயர் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்

2 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

தெளிவான விளக்கம். பிரதி எடுத்துக் கொண்டேன். பயனான தகவல் தந்தமைக்கு நன்றி ஐயா... மேலும் எழுதுங்கள்.

தமிழ்மாறன் சொன்னது…

வணக்கம். நிறைய தேடுங்கள் வளம் பெறுவீர்கள்