செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

ஏற்போம் சபதமே


படை திரட்டுவோம் – ஈனப்
பகை விரட்டுவோம் – வீர
நடை முடுக்குவோம் – வெற்றி
நகை முழக்குவோம் ... (படை)
திங்களோடு தென்றலோடு
வந்ததெங்கள் தமிழ்மொழி
எங்கிருந்து வந்தவர்க்கும்
வாழ்வளித்த பெருமொழி
சிங்கமக்கள் பெற்றெடுத்த
சீருலாவும் திருமொழி
பங்கமொன்று வருகுதெனில்
பார்த்திடவோ எம்விழி ... (படை)
ஆண்டதமிழ் மீண்டும் ஆள
வேண்டுமிந்த உலகிலே
மாண்டபுகழ் மீண்டுமிங்கு
மலரவேண்டும் கண்ணிலே
தோன்றின் புகழோடு நீயும்
தோன்ற வேண்டும் தமிழனே
ஈன்ற தாயின் நெஞ்சினிக்க
ஏற்கவேண்டும் சபதமே ... (படை)

1 கருத்து:

ச.ஹேமலதா சொன்னது…

உங்கள் படகு பயணத்தில் நானும் பயணம் செய்ய ஆவலாய் இருக்கின்றேன்.உங்களுடைய படைப்புகளைப் பார்த்துப் பிரமித்துப் போனேன்.நானும் இனிமேல் என் படைப்புகளை அனுப்ப தயாராக இருக்கின்றேன்.நீங்கள் மென்மேலும் உங்கள் பயணத்தைத் தொடர என் வாழ்த்துக்கள்.