வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

வாழ்வின் தேடல்....

வாழ்க்கையைப் பற்றி எத்தனை எத்தனை சிந்தனைகள்! நல்ல வாழ்விற்கு வழிகாட்டும் எண்ணற்ற வழிமுறைகள்! ஆயினும் மானுட வாழ்வென்பது அவலம்மிகுந்ததாகவே ஆனதை என் சொல்ல? வாழ்வென்பது என்ன? மூச்சுவிடுதல் மட்டுமா?

உண்ணுதலையும் உறங்குதலையும் சேர்த்துக் கொண்டால் போதுமா? இரை தேடுதலையும் நாளைக்கெனப் பொருள் குவிப்பதையும் வாழ்வின் கூடுதல் தேவைகளாகக் கொள்ளலாமா?அவை மட்டும் போதுமா இல்லை அன்பு காட்டுதலும் தன்பால் காட்டப்படும் அன்பை ஏற்றுக் கொள்ளுதலும் வாழ்வின் பகுதிகளாகுமா? கவிதையும் இலக்கியமும் இசையும் ஓவியமும் இன்னபிற கலைகளும் வாழ்க்கைக்குத் தேவையா இல்லையா?தேடல் என்பது என்ன? வாழ்வில் தேடலின் பங்களிப்பு என்ன?

தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலில் தோன்றாமை நன்று.. என்று
புகழின் பெருமையைப் பாடிச்சென்றார்களே.. வாழ்க்கைக்கு அந்தப் புகழால் என்ன பயன்?புகழ் பெற்று வாழ்ந்தவர்கள் எதைக் கொண்டு சென்றார்கள்? இல்லை அவர்கள் சென்ற பிறகு அவர்கள் சேர்த்த புகழால் அவர்களுக்குப் பயன் என்ன?
“பிறப்பிற்கு முன்பு ஏதுமில்லை; இறப்பிற்குப் பின்பு ஏதுமிருக்கப் போவதில்லை;”காட்டுப்âக்களாய்மலர்ந்து மறைந்தால் என்ன தவறு? புகழடைவதற்காகப் பலரது உழைப்பையும் உதிரத்தையும் உறிஞ்சிப் பிறர் வாழ்வில் முள்ளாய் உறுத்துதல் தகுமோ?

கருத்துகள் இல்லை: