வெள்ளி, 26 ஜூன், 2009

இசைப் புயல் ஓய்ந்தது


மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் (Michael Joseph Jackson, பி. ஆகஸ்ட் 29, 1958 - சூன் 25, 2009) ஓர் ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர். புகழ்பெற்ற ஜாக்சன் இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 1971இல் 11 வயது குழந்தையாக இருக்கும்பொழுது இவரின் நான்கு சகோதரர்களுடன் ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்து புகழ் அடைந்தார். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். 1982இல் வெளிவந்த த்ரிலர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது.
1980களின் ஆரம்பத்தில் பாப் இசை உலகில் புகழ் பெற்ற பாடகரானார். அமெரிக்காவில் முதலாக பல மக்கள் செல்வாக்குப் பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை எம்.டி.வி. ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழடைந்தது. இதனாலும் இசை நிகழ்படம் படைப்பு ஒரு முக்கியமான கலை ஆனது. ஜாக்சன் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகளும் பிரபலமானது. இவரின் நடனமாலும் இசையாலும் பல இசை வகைகள் தாக்கம் பெற்றன.
பல சமூக சேவைகளுக்கு உலக முழுவதிலும் கச்சேரிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார். ஆனால் குழந்தைகளுடன் உடலுறவு செய்தார் என்று 1993இல் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் இவர் குற்றமில்லாதவர் என்று தெரிவித்துள்ளது, ஆனாலும் இவர் பற்றிய பொது மக்களின் கருத்துகள் மோசமானது. இன்று வரையும் அமெரிக்கப் பரவலர் பண்பாட்டில் இவர் ஒரு செல்வாக்கு பெற்றவர் ஆவார்.
2009, ஜூன் 25 அன்று இவர் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார்[1], [2]. இதனை லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு துறை கேப்டன் இச்டீவ் ருடா உறுதிப்படுத்தினார்[3]. அதிகாரபூர்வமாக இவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

3 கருத்துகள்:

sivanes சொன்னது…

உலக வரலாற்றில் ஒரு இசை சாம்ராஜ்யம் தன் சகாப்தத்தை மிகவும் துயரத்தோடு முடித்துக்கொன்டுவிட்டது கண்டு மனம் மிக வருந்துகிறது, அவர் ஆத்மா சாந்தியடைய நமது அஞலியைச்செலுத்துவோம், நல்ல பதிவு, பாராட்டுக்கள்!

கே.பாலமுருகன் சொன்னது…

மைக்கல் ஜெக்சன் செய்த மிகப் பெரிய வரலாற்றுப் பிழை என்பது தனது கருப்பின அடையாளத்தை அழிக்க நினைத்தது. வெள்ளைத் தோல் மீது மோகம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்கு மேல் அறுவை சிகிச்சை, அவரின் அடையாளத்தைச் சிதைத்துவிட்டது.

நிகழ்ச்சிகளின் போது, அரங்கத்தில் பொறுத்தப்பட்டிருக்கும் விளக்குகளின் சூடு கூட அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு புற சூழலின் பாதிப்புகளுக்கு இலகுவான மனிதனாகப் போனதற்கு புகழ்ச்சியின் மீது அவருக்கு உண்டான மோகம் என்று சொல்லலாமா?

கே.பாலமுருகன்
(உங்கள் மாணவன்)

sathiz_surya சொன்னது…

Hi.. m sathiswaran sir!!! m a ilham scholar.. Go0d..Job!! well done sir!!