ஞாயிறு, 2 நவம்பர், 2008

பொறுத்தருள்வாய் இறைவா!

"கல்லாத பிழையும் கருதாப் பிழையும்
கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்
நின் ஐந்தெழுத்தும் சொல்லாப் பிழையும்
துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே !

"கச்சியேகம்பனே ! உன் பெருமைகளைக் கல்லாத பிழை; பெருமைக்குரிய உன்னை கருதாத பிழை; கருதியப் பின் கசிந்து உருகாத பிழை; உன் திருவடிகளை நினைந்து போற்றா பிழை ; உனக்குரிய ஐந்தெழுத்தை ஓதாத பிழை; எப்பொழுதும் உன்னையே துதிக்காத எல்லா பிழைகளையும் பொறுத்தருள வேண்டுகிறார் பட்டினத்தடிகளார்
.

கருத்துகள் இல்லை: