செவ்வாய், 19 மே, 2009

காலமே! கருணையே இல்லையா?


காலமே! உனது நெஞ்சில்
கருணையே இல்லையா?
எங்கள் ஓலமே நாதமாக
உன்வன்செவி வீழும்போலும்!
பாலையில் பயணம்போகும்
பாதையேன் தந்தாய்? நாங்கள்
ஆலைவாய் கரும்பாய்மாறி
அழுவதைக் காண்கின்றாயோ!
உணவில்லை பகிர்ந்துண்ண
உறவில்லை உடமையேதுமில்லை
உயிர்விலை என்னவிலை இனியில்லை
உணர்விலை உலகுக்கோ மனமில்லை
உனக்கோ எதுயெல்லை
ஏதும் தெரியவில்லை
கொடியோர் தினம்கொழுத்தே
உவப்பதும் நியாயந்தானா?
தமிழினத்தைத் துண்டாடி
துயராட வைப்பதும் சரிதானா?
புதுவெள்ளம் பெருக்கு
நாங்கள் மீண்டு துள்ளியெழ
புதுவிளக்கேற்று! புதியதோர்
தமிழ் உலகைக்காண
இல்லையேல் இனியும்
கெஞ்சாமல் எஞ்சிய
உயிரோடு உன்னையும்
வேரறுத்து நானும் வீழ்வேன்!
(‘விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய்ய நினைத்தாய்...’ என பாரதி தமிழரின் நிலைக்கு வருந்தி அழுதது என்னுள் அழியாத பதிவாக உள்ளது. இன்று இலங்கை கொடூர அரக்கனால் நடக்கும் தமிழினப் படுகொலையை எண்ணி என் இதய வலியில் கசிந்த வார்த்தைகள்)

2 கருத்துகள்:

Kamalakannan letchmanan சொன்னது…

vanakam sir, please sir upload me to kaoshonan@hotmail.com if you have any teaching materials. I have collected a few from internet but its looks like not in easy methods.

பெயரில்லா சொன்னது…

Vanakam Aiyah,KDPM KDC 1G maanavi naan,
புதுவெள்ளம் பெருக்கு
நாங்கள் மீண்டு துள்ளியெழ
புதுவிளக்கேற்று!
Intha varikal en manathai perithum kavarthullathu!
Padippavarkalukku manathil urchakam kodukkirathu.Serappaka ullathu!!!!!!!!
From,
Kavitha suppiah,Sentul KL.