சனி, 16 மே, 2009

காதல் செய்வீர் உலகத்தீரே

“காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
காணமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!”

பாரதியின் காதல் பரிந்துரை, மனிதக் காதலையும் தாண்டி தெய்விகம் சிந்தும் திருவார்த்தை .
‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்று உள்ளமுருகிய உத்தமக் காதலன் பாரதி

‘காதல் போயிற் காதல் போயிற் சாதல் சாதல் சாதல்...’ என்று சூளுரைத்தவனும் அவனே. மதம், இனம், மொழி, தேசம் என்ற எல்லா எல்லைகளயும் கடந்தவன் பாரதி.

காதலெனும் மோகனச் சொல்லில் விவரிக்க முடியாத தேவமயக்கம் என்றும் காந்தமாய் மனித இனத்தை கவர்ந்திழுக்கிறது.

காதல் ஒன்றுதான் இந்தப் பூமியை இன்றும் ஈரப்பசையோடு வைத்துள்ளது. காதல் இல்லையென்றால் பூமி வெறும் சுடுகாடு.

எல்லையில்லாத அன்பு மனிதனிடத்தோ இயற்கையிடத்தோ இறையிடத்தோ இல்லை அங்கெங்கெனாதபடி எவ்விடத்தும் நீக்கமற நிறைந்துள்ள பேராற்றல்தான் காதல்.

கருத்துகள் இல்லை: